இன்று (22.05.2025), பிரெய்லி பிரிவில் ஒரு பயனுள்ள மற்றும் உற்சாகமான நிகழ்வு நடைபெற்றது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் பார்வை திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தன்னார்வலர்களாக முன்வந்து, அவர்களுக்கு வாசித்து படித்து காண்பிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த முயற்சியின் மூலம், பார்வை திறன் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேர்வு தயாரிப்பை மிகவும் திறம்பட மேற்கொள்ள முடிந்தது.
தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பும், பார்வைமாற்றுத்திறனாளிகளின் உற்சாகமும் இந்த நிகழ்வுக்கு ஒரு தனித்துவமான சிறப்பை சேர்த்தது. இத்தகைய முயற்சிகள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை!
3:28 AM
Tags :
Activities
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments