பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள், நேற்று (22.03.2025) அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை புரிந்தனர். தளப் பொறுப்பாளர் முனைவர் M.N. வெங்கடேசன் அவர்கள் மாணவர்களை வரவேற்று, பிரெய்லி பிரிவில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகள் குறித்து விரிவாக விளக்கினார். ஆலோசகர் திரு.சங்கர் நூலகர்கள் திரு. S.மணிகண்டன், முனைவர் பா. மோகநாதன் மற்றும் திருமதி H. மும்தாஜ் பேகம் அவர்களும் உடன் இருந்தார்கள். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நடந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும், உற்சாகமாகவும் அமைந்தது. இந்த நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவங்களையும் ஊக்கத்தையும் அளித்தது!
12:43 AM
Tags :
Activities
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments