கர்நாடக இசையில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார் நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெய்லி பிரிவி - பார்வை மாற்றுத்திறன் மாணவர் திரு மனோஜ். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியும், இசைத்துறையில் அவரது பங்களிப்பும் மிகவும் பாராட்டத்தக்கவை. அவரது வாழ்க்கைப் பயணம், சவால்களை எதிர்கொண்டு அவர் காட்டிய உறுதி, மற்றும் இசையின் மீதான அவரது அன்பு அனைவருக்கும் ஒரு பாடமாக உள்ளது. பார்வைக் குறைபாடு என்பது எதையும் அடைய தடையாக இருக்காது என்பதற்கு திரு மனோஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது சாதனைகள் அனைத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக பார்வை மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கும், ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாக உள்ளது. கர்நாடக இசையில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்த மனோஜ் அவர்களை அண்ணா நூற்றாண்டு நூலகம் மனதார வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது!.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments